Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  06-01-2021

இன்றைய தியானம்(Tamil)  06-01-2021

ஆகாத கல் 

“வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” – சங்கீதம் 118:22

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன், கையிலிருந்த கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி வாசித்தாள். “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது, அவனுக்குக் கற்பிக்கத் திறமையான ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை. அதனால் நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று இருந்ததாக வாசித்தார்கள். வீட்டிலே பாடங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டில் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். பல ஆண்டுகள் கடந்தோடின, பழைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது தன் அம்மாவிடம் முன்பு ஒருமுறை பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம் அவர் கண்ணில் பட அதை எடுத்துப் படித்தார். அதில் “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த எடிசன் கண் கலங்கினார். பின் அவரது டைரியில் மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலே மாபெரும் கண்டுபிடிப்பாளர் ஆனான் என்று எழுதினார். 

கதரேனருடைய நாட்டில் அநேகம் பிசாசுகள் பிடித்திருந்த மனுஷன் இருந்தான். அவன் எல்லாராலும் துரத்தப்பட்டவனாகவும், ஒதுக்கப்பட்டவனாகவும் இருந்தான். ஆனால், இயேசுவோ அவனைத் தள்ளாமல் பிசாசுகளைத் துரத்தி அந்தப் பட்டணத்திற்கே சுவிசேஷம் அறிவிக்கப் பயன்படுத்தினார். அவனை ஊழியக்காரனாக மாற்றிவிட்டார். 

பிரியமானவர்களே! நாம் அநேக நேரங்களில் சரீரத்தில் குறைபாடு உள்ளவர்களையும், மனதளவில் குறைபாடு உள்ளவர்களையும் பார்த்து பரிதாபப்பட்டு, பின்பு கடந்து செல்கிறோம். மனவளர்ச்சி குன்றிய எடிசனை பள்ளி ஆசிரியர்கள் ஒதுக்கி ஆகாது என்று தள்ளி வைத்தனர். ஆனால் இவர் தான் எல்லா வீடுகளுக்கும் வெளிச்சம் கொடுக்கக்கூடிய பல்பை கண்டுபிடித்தார். மனுஷரால் துரத்தப்பட்ட அந்த மனுஷனையே அந்த பட்டணத்திற்கு சுவிசேஷம் அறிவிக்கக்கூடிய நபராக மாற்றினார். நம்முடைய தேவனும் எளியவர்களையும் தள்ளப்பட்டவர்களையும் தூக்கி எழுப்புதலுக்காக பயன்படுத்தி இருக்கிறார். எனவே, பலவீனரைத் தாங்குவோம். அவர்களும் தேவனால் பயன்படுத்தப்படும் வல்லமையான பாத்திரங்களாகட்டும். ஆமென்! 
-    S. மனோஜ்குமார் 

ஜெபக்குறிப்பு: 
தினதியான இதழின் ஆயத்த வேலைகளில் ஈடுபடும் தேவ பிள்ளைகளை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)